உள்ளூர் செய்திகள்
ரெயிலில் செல்போன் பேசியபடி பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழப்பு
கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயிலில் செல்போன் பேசியபடி பயணம் செய்த வாலிபர் தவறி விழுந்து உயிரிழந்தார்.
ஈரோடு:
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (31). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
இவர் நேற்று காலை கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயிலில் நெல்லைக்கு புறப்பட்டார். ரெயில் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அடுத்த கொளாநல்லி என்ற பகுதியில் சென்றது.
அப்போது பரமசிவன் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு செல்போனில் பேசியபடி பயணம் செய்தார். அப்போது திடீரென அவர் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தெரிய வந்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பலியான பரமசிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பரமசிவனின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.
நெல்லை மாவட்டம் சீவலப்பேரி அக்ரஹாரம் தெருவை சேர்ந்தவர் பரமசிவன் (31). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வந்தார்.
இவர் நேற்று காலை கோவை-நாகர்கோவில் பயணிகள் ரெயிலில் நெல்லைக்கு புறப்பட்டார். ரெயில் ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அடுத்த கொளாநல்லி என்ற பகுதியில் சென்றது.
அப்போது பரமசிவன் ரெயில் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு செல்போனில் பேசியபடி பயணம் செய்தார். அப்போது திடீரென அவர் ரெயிலில் இருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இது பற்றி தெரிய வந்ததும் ஈரோடு ரெயில்வே போலீசார் விரைந்து சென்று பலியான பரமசிவன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து பரமசிவனின் பெற்றோருக்கும் போலீசார் தகவல் தெரிவித்தனர்.