உள்ளூர் செய்திகள்
தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 312 வழக்குகளில் சமரச தீர்வு

Published On 2022-03-13 10:26 GMT   |   Update On 2022-03-13 10:26 GMT
வேதாரண்யத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 312 வழக்குகளில் சமரச தீர்வு காணப்பட்டுள்ளது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது.

இதில தேங்கியுள்ள வழக்குகளுக்கு தீர்வு காணும் வகையில் நிலுவையில் இருந்த சிவில் மற்றும் கிரிமினல் வழக்குகளை, நீதிபதி லிசி தலைமையில் லோக் அதாலத் மன்ற உறுப்பினர்களான வக்கீல்கள் குமரவேல், வைரமணி ஆகியோர் முன்னிலையில் விசாரிக்கப்பட்டது.

முடிவில்  கிரிமினல், சிவில் வழக்குகள் என 312 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு ரூ.2 லட்சத்து 67 ஆயிரத்து 300 அபராதத் தொகை விதிக்கப்பட்டது.
Tags:    

Similar News