உள்ளூர் செய்திகள்
தென்னிந்திய இயற்கை உணவு பொருட்கள் உற்பத்தியாளர் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு சிறப்பு திட்ட முகாம் நடந்தது.

வாலாஜாபேட்டையில் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு சிறப்பு திட்ட முகாம்

Published On 2022-03-13 15:13 IST   |   Update On 2022-03-13 15:13:00 IST
வாலாஜாபேட்டையில் தென்னிந்திய இயற்கை உணவு பொருட்கள் உற்பத்தியாளர் சங்கம் சார்பில் தொழில்முனைவோர் ஊக்குவிப்பு சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது.
வாலாஜா:

வாலாஜா எம்.பி.டி ரோட்டில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தென்னிந்திய இயற்கை மற்றும் உணவுப் பொருட்கள் உற்பத்தியாளர்கள் சங்கம் சார்பில் தொழில் முனைவோர் ஊக்குவிப்பு சிறப்பு திட்ட முகாம் நடைபெற்றது. 

முகாமில் ஒவ்வொரு ஒன்றியத்திலும் ஆர்வமுள்ள தொழில் முனைவோர்களை கண்டறிந்து அவர்களை தேர்வு செய்து அவர்களின் சுய தொழிலுக்கான தொழில் தன்மை இட வசதி, மின் வசதி, 

தண்ணீர் வசதி, தொழிலுக்கான ஆட்களை அமர்த்தும் வசதி போன்ற தொழிலுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்து தொழிலுக்கான தொழில் கூடம் இயந்திர தளவாடங்கள் மின்சாதன உபகரணங்கள் தொழிலுக்கான மூலப் பொருட்கள் கொள்முதல் செய்தல் குரு சிறு தொழிலுக்கான ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளை மேற்கொண்டு ஒரு ஒன்றியத்திற்கு குறைந்தபட்சம் ஐந்து தொழில்களை உருவாக்குதல் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

Similar News