உள்ளூர் செய்திகள்
கண்காட்சியை செல்வகணபதி எம்.பி. குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்த காட்சி.

கைவினை பொருட்கள் கண்காட்சி

Published On 2022-03-13 14:13 IST   |   Update On 2022-03-13 14:13:00 IST
கைவினை பொருட்கள் கண்காட்சியை செல்வகணபதி எம்.பி. திறந்து வைத்தார்
புதுச்சேரி:

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் சார்பாக உலக மகளிர் தினத்தை முன்னிட்டு புதுவையில் மாநில அளவிலான கைவினைப் பொருள் கண்காட்சி நடைப்பெற்றது. 

கண்காட்சியை  செல்வ கணபதி எம்.பி. தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். புதுவை வேளாண்மை அறிவியல் நிறுவனத்தின் தலைவர்  கணேஷ், கிராம புற பெண்கள் முன்னேற்றம் பற்றி சிறப்புரையாற்றினார். கண்காட்சியில் இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெற்ற பெண் தொழில் முனைவோர் தாங்கள் தயாரித்த கைவினைப் பொருட்களை காட்சிப்படுத்தினர். 

கண்காட்சியில் 100-க்கும் மேற்பட்ட தொழில் முனைவோர்கள் பயன் அடைந்தனர். கண்காட்சிக் கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் செய்து இருந்தனர்.

Similar News