உள்ளூர் செய்திகள்
மணல் கடத்தல் வழக்கில் 2 பேர் கைது
மணல் கடத்தல் வழக்கில் 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வடக்கு புதுக்குடிஅரசு பள்ளி அருகே அதே கிராமத்தை சேர்ந்த இளையராஜா 23 மற்றும் சத்ரியன் 34 ஆகியோர் டிராக்டரில் எந்த வித அரசு அனுமதியும் இல்லாமல் கிராவல் மண் கடத்தி செல்வதாக ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன் பேரில் சம்பவ இடம் சென்று பார்வையிட்டு இருவரையும் பிடித்து விசாரணை செய்ததில் அவர்கள் மணல் திருடியதை ஒப்புக் கொண்டனர்.
இதைத்தொடர்ந்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஆண்டிமடம் தாசில்தார் முத்துகிருஷ்ணன் புகார் அளித்தார்.
புகாரின் பேரில் இளையராஜா சத்ரியன் ஆகிய இருவரையும் கைது செய்த ஜெயங்கொண்டம் போலீசார் மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய டிராக்டரையும் பறிமுதல் செய்து அவர்களை கைது செய்தனர்