உள்ளூர் செய்திகள்
நெல் கொள்முதல் நிலையம் முன்பு குவிக்கப்பட்டு உள்ள நெல்கள்.

நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க விவசாயிகள் வலியுறுத்தல்

Published On 2022-03-12 15:26 IST   |   Update On 2022-03-12 15:26:00 IST
நெல் கொள்முதல் நிலையத்தை திறக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினர்
டி.என்.பாளையம்:

டி.என்.பாளையம் அருகே உள்ள தடப்பள்ளி& அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் தற்போது நெல் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளது, ஒவ்வொரு அறுவடையின் போதும் முன்னதாகவே அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் அரக்கன்கோட்டை பாசன வாய்க்கால் பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பே அறுவடை தொடங்கப்பட்ட நிலையில் ஓரிரு இடங்களில் அரசின் நேரடி நெல் கொள்முதல் மையங்கள் திறக்கப்படாமல் உள்ளது. 

அதன் ஒரு பகுதியாக டி.என்.பாளையம் அருகேயுள்ள ஏளூரில் அரசு நேரடி நெல் கொள்முதல் மையம் கடந்த 7&ந் தேதி திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து ஏளூர், இந்திராநகர், நால்ரோடு உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து 25-க்கும் மேற்பட்ட விவசாயிகள் வயலில் அறுவடை செய்த நெல்லை நேரடி நெல் கொள்முதல் மையம் முன்பு உள்ள இடத்தில் குவியலாக குவித்து வைத்துள்ளனர். 

ஆனால் இதுவரை நேரடி நெல் கொள்முதல் மையம் திறக்கப்படவில்லை.  இதுகுறித்து விவசாயிகள் கூறும்போது,

கடந்த 5 நாட்களாக அறுவடை செய்த நெல்லை கொட்டி வைத்து விட்டு இரவு நேரங்களில் காவல் இருக்க வேண்டிய நிலை உள்ளது. மழை பெய்தால் நெல் அணைத்து வீணாகிவிடும். எங்கள் வாழ்வாதாரமும் பாதிக்கப்படும். இதனால் உடனடியாக நெல் கொள் முதல் மையத்தை திறக்க வேண்டும் என்றனர்.

இதுகுறித்து அதிகாரிகள் கூறும்போது, தற்போது கூடுதலாக நெல் கொள்முதல் மையங்கள் தொடங்கப்பட்டு உள்ளதால் அதற்கேற்ப பணி யாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். உடனடியாக நெல் கொள்முதல் மையம் திறக்கப்படும் என்றனர்.

Similar News