உள்ளூர் செய்திகள்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனிடம் மனு அளித்த நாகை எம்.எல்.ஏ. முகம்மது ஷாநவாஸ்

கடல்நீர் உட்புகுவதை தடுக்க அமைச்சரிடம் எம்.எல்.ஏ. கோரிக்கை

Published On 2022-03-12 10:51 IST   |   Update On 2022-03-12 10:51:00 IST
நாகூர் கீழப்பட்டினச்சேரி சிராமத்தில் கடல்நீர் உட்புகுவதை தடுக்க வேண்டும் அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணனிடம் முகமதுஷாநவாஸ் எம்.எல்.ஏ. கோரிக்கை மனு அளித்தார்.
நாகப்பட்டினம்:

மீன்வளம்-மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணனை சந்தித்து, நாகை எம்.எல்.ஏ முகம்மது ஷா நவாஸ் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தார்.

குறிப்பாக, நாகப்பட்டினம் நாகூர் கீழப்பட்டினச்சேரி மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தின் காரணமாக கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் உட்புகுந்து மக்களுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்படுவதால், கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தார்.

மேலும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட, நம்பியார் நகர் கடலரிப்பு தடுப்புச் சுவர் அமைக்கும் பணியினையும், சாமந்தான் பேட்டை தூண்டில் வளைவுடன் கூடிய சிறு துறைமுகப் பணியினையும் விரைந்து நிறைவேற்ற வேண்டுமென வலியுறுத்தினார். 

திருமருகல், அம்பல் ஆகிய இடங்களில் உள்ள கால்நடை மருந்தகங்களை கால்நடை மருத்துவமனைகளாக தரம் உயர்த்திட வேண்டும், திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சி மற்றும் பாக்கம் கோட்டூர் ஊராட்சியில் கால்நடை கிளை நிலையம் அமைக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்.

Similar News