உள்ளூர் செய்திகள்
பலி

இளம்பெண் வாகனம் மோதி சாவு

Published On 2022-03-11 17:57 IST   |   Update On 2022-03-11 17:57:00 IST
சாலையை கடக்க முயன்ற இளம்பெண் வாகனம் மோதி பரிதாபமாக இறந்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புதுப்பட்டியில் தனியார் காட்டன் மில் உள்ளது. இங்கு பீகாரைச் சேர்ந்த நிமிகுமாரி (வயது 18) குடும்பத்துடன் தங்கியிருந்து பணி புரிந்து வந்தார். 

கடந்த 9-ந் தேதி இரவு நிமிகுமாரி மில் வாசல் எதிரே சாலையை கடக்க முயன்றபோது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் மோதியது. இதில் படுகாயமடைந்த நிமிகுமாரி மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். 

இதுகுறித்த புகாரின்பேரில் வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். 

Similar News