உள்ளூர் செய்திகள்
விஷம் குடித்து தற்கொலை

கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2022-03-11 17:54 IST   |   Update On 2022-03-11 17:54:00 IST
கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்

தென்காசி மாவட்டம் ஆலங்குடி கிராமத்தைச் சேர்ந்த அம்பிகா-மாரியம்மன் தம்பதியின் மகன் மணிகண்டன் (வயது 22). 

இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள கிருஷ்ணன் கோவில் கலசலிங்கம் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பார்மசி கல்லூரியில் பிபார்ம் 4-ம் ஆண்டு படித்து வந்தார். 

4 நாட்களுக்கு முன்பு இவர் அங்குள்ள விடுதி அறையில் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். 

இதுகுறித்து தாயார் அம்பிகா கொடுத்த புகாரின் பேரில் கிருஷ்ணன் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 


Similar News