உள்ளூர் செய்திகள்
தாக்குதல்.

தாய்-மகன் மீது தாக்குதல்

Published On 2022-03-11 17:42 IST   |   Update On 2022-03-11 17:42:00 IST
தாய்-மகன் மீது தாக்குதல் நடந்தது-.
விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள பரளச்சியை சேர்ந்தவர் பொன்மலர் (வயது 24). இவர் பரளச்சி போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். 

அதில், சம்பவத்தன்று கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக அதே பகுதியைச் சேர்ந்த சண்முகராஜ், அவரது தாய் குப்பச்சி,  சகோதரர் பார்த்திபன், சகோதரி பாப்பா லட்சுமி ஆகிய 4 பேரும் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து தகராறு செய்ததோடு என்னையும் எனது சகோதரி ரவீனா, மற்றும் தாயை சரமாரியாக தாக்கினர் என்று குறிப்பிட்டுள்ளார். 

இதன் அடிப்படையில் போலீசார் 3 பெண்களை தாக்கிய சண்முகராஜ் உட்பட 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



Similar News