உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 90.87 அடியாக குறைந்தது

Published On 2022-03-11 14:50 IST   |   Update On 2022-03-11 14:50:00 IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
சத்தியமங்கலம்:

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்து வருவதால் அணையின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
 
பவானிசாகர் அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாச னத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. இதனால் ஈரோடு மாவட்ட விவசாயிகள் மட்டுமின்றி திருப்பூர், கரூர் மாவட்ட விவ சாயிகளும் பயன் அடைந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பவானிசாகர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு குறைந்து அணை யின் நீர்மட்டம் குறைந்து வருகிறது.

இன்று காலை நிலவரப் படி பவானிசாகர் அணை யின் நீர்மட்டம் 90.87 அடியாக இருந்தது. அணைக்கு 1333 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. 

அணையில் இருந்து ஆற்றில் குடிநீருக்கு 200 கனஅடியும், காலிங்கராயன் வாய்க்காலில் 500 கன அடியும், கீழ்பவானி வாய்க் காலில் 2300 கன அடி என மொத்தம் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளி யேற்றப் பட்டு வருகிறது.

பவானிசாகர் அணைக்கு வரத்தை விட அதிக அளவு தண்ணீர் வெளி யேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்து வருகிறது. இதனால் விவ சாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

Similar News