உள்ளூர் செய்திகள்
மருத்துவ முகாம்

வருமுன் காப்போம் மருத்துவ முகாம்

Published On 2022-03-11 13:54 IST   |   Update On 2022-03-11 13:54:00 IST
திருமருகல் அருகே வருமுன் காப்போம் மருத்துவ முகாம் நடைபெற்றது.
நாகப்பட்டினம்:

திருமருகல் ஒன்றியம் ஆதலையூர் ஊராட்சி தனியார் பள்ளியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஆதலையூர் ஊராட்சி மன்ற தலைவர் தென்மதி சந்திரசேகரன் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி முகாமை தொடக்கி வைத்தார். 

வட்டார மருத்துவ அலுவலர் மணிவேல், ஒன்றிய குழு உறுப்பினர் அபிநயா அருண்குமார், ஏனங்குடி மருத்துவ அலுவலர் மோகன்தாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த முகாமில் ரத்தப் பரிசோதனை, ஈசிஜி பரிசோதனை, ஸ்கேன், பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு மருத்துவ குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் ஏனங்குடி, ஆதலையூர், கேதாரிமங்கலம் பகுதிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர். 

இதில் அப்பள்ளியின் தாளாளர் ஜாஹிர் உசேன், பள்ளி அறங்காவலர் மைதீன் அப்துல் காதர், முதன்மை நிர்வாகி தமிமுல் அன்சாரி, பள்ளி தலைமை ஆசிரியர் நேருஜி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கற்பகம் மற்றும் பகுதி சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் மருத்துவமனை பணியாளர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Similar News