உள்ளூர் செய்திகள்
9 மீனவர்களிடம் இந்திய கப்பல் படையினர் விசாரணை நடத்தினர்.

9 மீனவர்களிடம் கப்பல் படையினர் விசாரணை

Published On 2022-03-11 13:53 IST   |   Update On 2022-03-11 13:53:00 IST
விசைப்படகில் உரிய ஆவணங்கள் இன்றி கடலில் மீன்பிடித்த மயிலாடுதுறை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களிடம் கப்பல் படையினர் விசாரணை மேற்கொண்டனர்.
நாகப்பட்டினம்:

மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் மீனவ கிராமத்தைச் 
சேர்ந்தவர் கலைவாணன் இவருக்கு சொந்தமான விசைப்படகில் 10-ம் தேதி கலைவாணன், ராஜி, கவியரசன், செங்குட்டுவன் உள்ளிட்ட 9 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்கச் சென்றனர்.

திருமுல்லைவாசல் கிழக்கே 6 நாட்டிக்கல் மைல் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது ரோந்து பணியில் ஈடுபட்ட இந்திய இந்திய கப்பல் படையினர் மீனவர்களின் படகையும் ஆவணங்களையும் சோதனை செய்தனர், உரிய ஆவணங்கள் இன்றி கடலுக்கு மீன்பிடிக்க தொழிலுக்கு வந்தது தெரியவந்தது.

இதனையடுத்து படகுடன் 9 மீனவர்களையும் நாகை துறைமுகம் அழைத்து வந்தனர், அங்கு மீன்வளத் துறையினர் மற்றும் கடலோர காவல் குழும போலீஸ்£ர் விசாரணை மேற்கொண்டதில் கலைவாணன் நாகை அக்கரைப்பேட்டை மணிகண்டனிடமிருந்து படகு வாங்கியதும் பெயர் மாற்றம் செய்யப்படதாததும் தெரியவந்தது. 

இதனை தொடர்ந்து அவர்களது உறவினர்கள் அடையாள அட்டை மற்றும் படகின் ஆவண நகலை கொடுத்தனர். பின்பு அவர்கள் மயிலாடுதுறை மாவட்டம் திருமுல்லைவாசல் கிராமத்தை சேர்ந்தவர் என உறுதிப்படுத்திய பின்பு அவர்களை விடுவித்தனர். 

அடையாள அட்டை மற்றும் ஆவணங்கள் இல்லாமல் கடலுக்குச் சென்ற மீனவர்களுக்கு நாளை மீன்வளத்துறை அதிகாரிகள் அபராதம் விதிக்கப்படும் என கூறப்படுகிறது.

Similar News