உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

40 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்

Published On 2022-03-10 16:06 IST   |   Update On 2022-03-10 16:06:00 IST
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் 40 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.
ஈரோடு:
பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழாவில் 40 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

புகழ்பெற்ற பண்ணாரியம்மன் கோவில் குண்டம் திருவிழா வரும் 15-ந் தேதி தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான குண்டம் இறங்கும் நிகழ்ச்சி வரும் 21,22-ந் தேதி நடக்கிறது. 

23-ந் தேதி புஷ்பரதம் நிகழ்ச்சியும், 24-ந் தேதி மஞ்சள் நீராட்டு விழாவும், 25-ந் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
 
அதைத்தொடர்ந்து 28-ந்  தேதி மறுபூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. குண்டம் விழா அன்று லட்சக்கணக்கான மக்கள் பண்ணாரி அம்மன் கோவிலுக்கு வருவது வழக்கம். இதேபோல் கர்நாடக மாநிலத்தில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் வருவார்கள். 

குண்டம் நிகழ்ச்சியில் அசம்பாவிதங்களை தடுக்க வும், வனத்தையொட்டிய இடத்தில் தீ விபத்து நடைபெறாமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக் கையாக தீயணைப்பு வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். குண்டம் விழாவையொட்டி தீயணைப்பு துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 

இது குறித்து ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி கூறியதாவது:&

பண்ணாரி அம்மன் குண்டம் கோவில் திருவிழாவையொட்டி ஈரோடு தலைமை தீயணைப்பு நிலைய அலுவலகத்தில் இருந்து 2 தீயணைப்பு வாகனம், ஒரு பம்ப் வாகனமும் வரும் 19-ந் தேதி முதல் பண்ணாரியம்மன் கோவில் அருகே நிறுத்தப்பட்டு 24 மணி நேரமும் 30 தீயணைப்பு வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளார்கள்.

குண்டம் விழா அன்று கூடுதலாக 10 பேர் என மொத்தம் 40 தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள். குண்டம் இறங்கும் போது ஏதேனும் விபத்து ஏற்பட்டாமல் தடுக்கும் வகையில் தீயணைப்பு வீரர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் தொடர்ந்து ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.

Similar News