உள்ளூர் செய்திகள்
அப்துல் ஆசிப்

கர்நாடக எல்லையில் பதுங்கி இருந்த பிரபல ரவுடி கைது

Published On 2022-03-10 16:02 IST   |   Update On 2022-03-10 16:02:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக மாநில எல்லையில் பதுங்கி இருந்த ரவுடியை போலீசார் கைது செய்தனர்.
ஓசூர், 

மகாராஷ்டிரா மாநிலத் தில் கொள்ளை, கொலை, ஆள்கடத்தல், போதைப்பொருள் விற்பனை உள்ளிட்ட 37-&க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகளில்  தொடர்புடைய அப்துல் ஆசிப் என்ற பிரபல ரவுடி, நீண்ட நாட்களாக சிக்காமல் மும்பை போலீசாருக்கு தண்ணி காட்டி வந்தார்.

அந்த குற்றவாளி,  மகாராஷ்டிரா  மாநிலத்திலிருந்து தலைமறைவாகி, ஓசூர் அருகே தமிழக- கர்நாடக எல்லையில், பிரபல இரு சக்கர வாகனம்  தயாரிக்கும் தொழிற்சாலை அருகே கர்நாடக காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கி வந்துள்ளார்.

மேலும் ஓசூர் அருகே மத்திகிரி பகுதியில் நடைபெற்ற இருசக்கர வாகன பந்தயத்தையும் அவர் கண்டுரசித்து சென்றதாக கூறப்படுகிறது.

இந்த தகவல்களை அறிந்த மகாராஷ்டிரா போலீசார், உடனடியாக ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள அத்திப்பள்ளி  காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், அத்திப்பள்ளி  காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் அந்த குற்றவாளி தங்கிருக்கும் ரகசிய தகவல், மும்பை போலீசாருக்கு கிடைத்தது.

அதன் பேரில், மும்பை போலீசார் விரைந்து வந்து அத்திப்பள்ளி போலீசார் உதவியுடன் தனியார் விடுதியில் தங்கி இருந்த மும்பை ரவுடி அப்துல் ஆசிப் என்கிற இலியாஸ் தங்கியிருந்த அறையை  ரகசியமாக மாற்று சாவியால் திறந்து, அந்த குற்றவாளியை  சுற்றிவளைத்து கையும் களவுமாக பிடித்தனர். 

மேலும் அந்த குற்றவாளியிடம் இருந்து   தோட்டாக்களுடன் ஒரு கைத்துப்பாக்கி, 10-&க்கும் மேற்பட்ட செல்போன்கள்,  20&-க்கும் மேற்பட்ட சிம் கார்டுகள், 5 பென் டிரைவ்களை போலீசார் கைப்பற்றினர்.

 பின்னர் அத்திப்பள்ளி சர்க்கிள் இன்ஸ்பெக்டர் விஸ்வநாத் தலைமையில் போலீசார், அந்த குற்றவாளியை, அத்திப்பள்ளி காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து   மும்பை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Similar News