உள்ளூர் செய்திகள்
அசகண்டவீரன் கோவில் மகா கும்பாபிஷேகம்
நாகை அருகே கருவேலங்கடை அசகண்டவீரன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது-.
நாகப்பட்டினம்:
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடையில் பழமை வாய்ந்த அண்ணாட்சி அம்மன், அக்கம்பிளவாய் சமேத அசகண்டவீரன் கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7&ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி கணபதி, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்றது.
தொடர்ந்து யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாஹீதியும், தொடர்ந்து கடத்தை சுமந்து வலம் வந்து அசகண்ட வீரன் கோவில் கலசத்தில், புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.