உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகம் நடந்தது.

அசகண்டவீரன் கோவில் மகா கும்பாபிஷேகம்

Published On 2022-03-10 15:59 IST   |   Update On 2022-03-10 15:59:00 IST
நாகை அருகே கருவேலங்கடை அசகண்டவீரன் கோவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது-.
நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி அடுத்த கருவேலங்கடையில் பழமை வாய்ந்த அண்ணாட்சி அம்மன், அக்கம்பிளவாய் சமேத அசகண்டவீரன் கோவிலில் அமைந்துள்ளது. இக்கோவிலில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கடந்த 7&ம் தேதி காலை விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்கி கணபதி, நவக்கிரக ஹோமம், பூர்ணாஹுதி நடைபெற்றது. 

தொடர்ந்து யாகசாலை பூஜைகள், மகா பூர்ணாஹீதியும், தொடர்ந்து கடத்தை சுமந்து வலம் வந்து அசகண்ட வீரன் கோவில் கலசத்தில், புனித நீர் ஊற்றப்பட்டு மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.

Similar News