உள்ளூர் செய்திகள்
மாயம்

மாணவி உள்பட 2 பேர் மாயம்

Published On 2022-03-10 15:36 IST   |   Update On 2022-03-10 15:36:00 IST
விருதுநகர் அருகே மாணவி உள்பட 2 பேர் மாயமாகினர்.
விருதுநகர்

அருப்புக்கோட்டை அருகே உள்ள கண்டுகொண்டான் மாணிக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சதுரகிரி. இவரது மகள் ஆனந்தி(20),  அருப்புக்கோட்டையில் உள்ள கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வந்தார். 

சம்பவத்தன்று கல்லூரிக்கு சென்ற இவர் மாயமாகி விட்டதாக நரிக்குடி போலீசில் சதுரகிரி புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரைச் சேர்ந்த கண்ணாயிரம் மகள் விஜயலட்சுமி (20) திருச்சுழி அருகே உள்ள மில்லில் வேலை பார்த்து வந்தார். இதற்காக விடுதியில் தங்கியிருந்த அவர் மாயமானதாக விடுதி காப்பாளர் மரகதம் புகார் செய்துள்ளார். திருச்சுழி போலீசர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News