உள்ளூர் செய்திகள்
.

ஏரியில் மூழ்கி சிறுவன் பலி

Published On 2022-03-10 15:24 IST   |   Update On 2022-03-10 15:24:00 IST
கிருஷ்ணகிரி அருகேஏரியில் மூழ்கி சிறுவன் பலியானான்.
கிருஷ்ணகிரி, 

திருப்பத்தூர் மாவட்டம் பேரணாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். இவரது மகன் சுரேஷ் (வயது 13). ஊத்தங்கரையில் அரசு பள்ளியில் 7&ம் வகுப்பு படித்து வந்தான்.

இந்த நிலையில் நேற்று கிருஷ்ணகிரி அருகே கொண்டேபள்ளி ஏரியில் சுரேஷ் குளித்தான். அப்போது திடீரென ஆழமான பகுதிக்கு சென்றதால் சிறுவன் தண்ணீரில் மூழ்கினான். சிறிதுநேரத்தில் சுரேஷ் பரிதாபமாக இறந்தான்.

இதுபற்றி கிருஷ்ணகிரி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News