உள்ளூர் செய்திகள்
தற்கொலை

புஞ்சைபுளியம்பட்டியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை

Published On 2022-03-10 11:09 IST   |   Update On 2022-03-10 11:09:00 IST
புஞ்சைபுளியம்பட்டியில் என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் எலிபேஸ்ட் சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பு.புளியம்பட்டி:

புஞ்சை புளியம்பட்டி கோழிப்பண்ணை தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவரது மகன் ரங்கநாதன் (21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் என்ஜினீயரிங் 2 -ம் ஆண்டு படித்து வந்தார்.

கொரோனா காலகட்டத்தில் மன அழுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டு இருந்தார். பின்னர் சிகிச்சைக்கு பிறகு தற்போது தினமும் வீட்டில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று வீட்டில் உணவு சாப்பிட்டவுடன் மாணவர் ரங்கநாதன் வாந்தி எடுத்தார். இதையடுத்து அவரிடம் பெற்றோர் கேட்ட போது தான் வயிறு வலி அதிகமாக இருந்ததால் எலிபேஸ்ட் சாப்பிட்டு விட்டதாக தெரிவித்தார்.

இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் அவரை மீட்டு கோவையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் இறந்து விட்டார். இது குறித்து புஞ்சை புளியம்பட்டிபோலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News