உள்ளூர் செய்திகள்
போலீஸ், வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து பலரிடம் கைவரிசை காட்டிய முதியவர் கைது
திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே பல்வேறு போலீஸ் நிலையங்களில் அப்துல் சலீம் மீது 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
ஈரோடு:
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆலுத்தாம்பாளையம் அண்ணா வீதியை சேர்ந்தவர் குழந்தைவேல் (66). இவர் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி திண்டலில் இருந்து ஆனைக்கல்பாளையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மூலப்பாளையம் பூந்துறை ரோடு பகுதியில் சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தான் வருமான வரித்துறை அதிகாரி என்றும் நகைகளை அணிந்து செல்வதற்கு உரிய ஆவணம் உள்ளதா? என்று கேட்டு மிரட்டியுள்ளார்.
பின்னர் அந்த நபர் நைசாக பேசி குழந்தைவேலு அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (73) என்பவர் தனது உறவினரை பார்ப்பதற்காக ஈரோடு கொல்லம்பாளையத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் திரும்பி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் நின்ற ஒரு நபர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தான் வனத்துறை அதிகாரி என்று மிரட்டி சுப்பிரமணியத்திடம் இருந்து ஒரு பவுன் மோதிரத்தை பறித்து தப்பி சென்றார்.
இதேபோல் எழுமாத்தூர்காட்டுவலசு பகுதியை சேர்ந்த மணி (55). இவர் நிலகடலை வியாபாரி என்பதால் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ஒரு லட்சம் பணத்துடன் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த நபர் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ.1 லட்சத்தை பறித்து விட்டு சென்றார். 3 சம்பவங்களிலும் ஈடுபட்டவர் ஒரே நபர் என போலீசார் உறுதிப்படுத்திக் கொண்டு அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.போலீஸ் விசாரணையில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்தவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம், காமராஜர் நகரைச் சேர்ந்த அப்துல் சலீம் (65) என்பது தெரிந்தது.
இந்நிலையில் அப்துல் சலீம் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அப்துல் சலீமை கைது செய்தனர்.
பின்னர் அவர் விசாரணைக்காக ஈரோட்டுக்கு அழைத்து வரப்பட்டார். போலீசாரின் விசாரணையில் அப்துல் சலீம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
திருப்பூர்மாவட்டம் பல்லடம் காமராஜர் நகர் தான் அப்துல் சலீம் சொந்த ஊராகும். இவருக்கு 2 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர். அப்துல்சலீம் முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஜீப் டிரைவராக சில நாட்கள் வேலை பார்த்தார். பின்னர் அவர் அந்த வேலையிலிருந்து நின்று விட்டார். இருந்தாலும் போலீசார் ஏவ்வாறு பேசுவார்கள் அவர்களின் நடை உடை பாவனை ஆகியவற்றை தெரிந்து கொண்டார்.
பின்னர் எந்த வேலைக்கும் செல்லாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறி பலரிடம் பணம், நகையை பறித்துள்ளார். இவ்வாறு திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே பல்வேறு போலீஸ் நிலையங்களில் அப்துல் சலீம் மீது 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் இவர் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து பலரிடம் கைவரிசை காட்டி யுள்ளார். கோபியில் இவர் மீது ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. இந்நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் ஈரோட்டை சேர்ந்த குழந்தைவேல் என்பவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோதிரத்தை பறித்துள்ளார்.
அப்துல் சலீமிடம் இருந்து நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்துல் சலீம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அவர் கோபியில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி ஆலுத்தாம்பாளையம் அண்ணா வீதியை சேர்ந்தவர் குழந்தைவேல் (66). இவர் கடந்த ஜனவரி மாதம் 8-ந் தேதி திண்டலில் இருந்து ஆனைக்கல்பாளையம் நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது மூலப்பாளையம் பூந்துறை ரோடு பகுதியில் சென்ற போது அங்கு நின்று கொண்டிருந்த ஒரு நபர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தான் வருமான வரித்துறை அதிகாரி என்றும் நகைகளை அணிந்து செல்வதற்கு உரிய ஆவணம் உள்ளதா? என்று கேட்டு மிரட்டியுள்ளார்.
பின்னர் அந்த நபர் நைசாக பேசி குழந்தைவேலு அணிந்திருந்த தங்க மோதிரத்தை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.
இதேபோல் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் பகுதியை சேர்ந்த சுப்பிரமணி (73) என்பவர் தனது உறவினரை பார்ப்பதற்காக ஈரோடு கொல்லம்பாளையத்திற்கு வந்தார்.
பின்னர் அவர் திரும்பி மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்த போது அந்த பகுதியில் நின்ற ஒரு நபர் மோட்டார் சைக்கிளை வழிமறித்து தான் வனத்துறை அதிகாரி என்று மிரட்டி சுப்பிரமணியத்திடம் இருந்து ஒரு பவுன் மோதிரத்தை பறித்து தப்பி சென்றார்.
இதேபோல் எழுமாத்தூர்காட்டுவலசு பகுதியை சேர்ந்த மணி (55). இவர் நிலகடலை வியாபாரி என்பதால் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் ஒரு லட்சம் பணத்துடன் சென்று கொண்டிருந்தபோது அவரை வழிமறித்த நபர் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து ரூ.1 லட்சத்தை பறித்து விட்டு சென்றார். 3 சம்பவங்களிலும் ஈடுபட்டவர் ஒரே நபர் என போலீசார் உறுதிப்படுத்திக் கொண்டு அந்த நபர் குறித்து விசாரணை மேற்கொண்டனர்.
ஈரோடு டவுன் டி.எஸ்.பி ஆனந்தகுமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.போலீஸ் விசாரணையில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்தவர் திருப்பூர் மாவட்டம் பல்லடம், காமராஜர் நகரைச் சேர்ந்த அப்துல் சலீம் (65) என்பது தெரிந்தது.
இந்நிலையில் அப்துல் சலீம் திருப்பூரில் பதுங்கி இருப்பதாக தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அப்துல் சலீமை கைது செய்தனர்.
பின்னர் அவர் விசாரணைக்காக ஈரோட்டுக்கு அழைத்து வரப்பட்டார். போலீசாரின் விசாரணையில் அப்துல் சலீம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.
திருப்பூர்மாவட்டம் பல்லடம் காமராஜர் நகர் தான் அப்துல் சலீம் சொந்த ஊராகும். இவருக்கு 2 மனைவிகள், 7 குழந்தைகள் உள்ளனர். அப்துல்சலீம் முன்னாள் உயர் போலீஸ் அதிகாரி ஒருவரிடம் ஜீப் டிரைவராக சில நாட்கள் வேலை பார்த்தார். பின்னர் அவர் அந்த வேலையிலிருந்து நின்று விட்டார். இருந்தாலும் போலீசார் ஏவ்வாறு பேசுவார்கள் அவர்களின் நடை உடை பாவனை ஆகியவற்றை தெரிந்து கொண்டார்.
பின்னர் எந்த வேலைக்கும் செல்லாமல் குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு திருப்பூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தன்னை போலீஸ் அதிகாரி என்று கூறி பலரிடம் பணம், நகையை பறித்துள்ளார். இவ்வாறு திருப்பூர் மாவட்டத்தில் மட்டுமே பல்வேறு போலீஸ் நிலையங்களில் அப்துல் சலீம் மீது 36 வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் இவர் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து பலரிடம் கைவரிசை காட்டி யுள்ளார். கோபியில் இவர் மீது ஏற்கனவே குண்டர் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவாகியுள்ளது. இந்நிலையில் தான் கடந்த ஜனவரி மாதம் ஈரோட்டை சேர்ந்த குழந்தைவேல் என்பவரிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் போல் நடித்து மோதிரத்தை பறித்துள்ளார்.
அப்துல் சலீமிடம் இருந்து நகைகள் மற்றும் ரூ.75 ஆயிரம் ரொக்க பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து அப்துல் சலீம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அவர் கோபியில் உள்ள மாவட்ட கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.