உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மதுவில் விஷ மாத்திரை கலந்து பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை

Published On 2022-03-09 15:23 IST   |   Update On 2022-03-09 15:23:00 IST
மதுவில் விஷ மாத்திரை கலந்து பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஈரோடு:

மதுவில் விஷ மாத்திரை கலந்து பெட்ரோல் பங்க் ஊழியர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஈரோடு, ரங்கம் பாளையம்,  இரணியன் வீதியை சேர்ந்தவர் பாலன் (51).  இவரது மனைவி சுமதி. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.  பாலன் திண்டலில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்து வந்தார்.
  
இந்நிலையில் கடந்த 3 நாட்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அவருக்கு குடிப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. போதிய வருமானம் இல்லாததால் வீட்டு வாடகை, மகன், மகள் படிப்புக்கு செலவு செய்ய முடியவில்லையே என கூறி பாலன் வேதனையில் இருந்துள்ளார். இதனால் அவரது மனைவி ஆறுதல் கூறி வந்தார்.

சம்பவத்தன்று இரவு அனைவரும் தூங்க சென்று விட்டனர். நள்ளிரவில் பாலன் திடீரென வாந்தி எடுத்துள்ளார். இது குறித்து அவரது மனைவி விசாரித்தபோது தான் மதுவில் விஷ மாத்திரை கலந்து குடித்து விட்டதாக தெரிவித்தார்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அவரை ஈரோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலன் பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News