உள்ளூர் செய்திகள்
முருகப்பெருமான் வள்ளிதெய்வயானையுடன் மயில் வாகனத்தில் திருவீதி உலா வந்த போது எடுத்த படம்.

சென்னிமலை-மகுடேஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்

Published On 2022-03-09 15:14 IST   |   Update On 2022-03-09 15:14:00 IST
3 நாட்கள் தொடர்ந்து விஷேசம் என்பதால் சென்னிமலை -மகுடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
சென்னிமலை:

3 நாட்கள் தொடர்ந்து விஷேசம் என்பதால் சென்னிமலை -மகுடேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.

சென்னிமலை முருகன் கோவிலுக்கு செவ்வாய்க் கிழமை தோறும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள்.  இங்கு சஷ்டி அன்றும் பக்தர்கள் கூட்டம் அதிகம் இருக்கும். கார்த்திகை விரதம் இருந்தும் பக்தர்கள் வருவார்கள்.

இந்த நிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை மற்றும் சஷ்டி தினம், கார்த்திகை என ஒரே நாளில் 3 விசேஷங்கள் வந்தது. இதனால் சென்னிமலை முருகன் கோவிலில் அதிகாலை முதலே பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 

இதையொட்டி அதி காலை 5 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு கோ பூஜை நடந்தது. தொடர்ந்து  முருகப் பெரு மானுக்கு பால், தயிர், பன்னீர் போன்ற பொருட் களால் அபிஷேகங்கள் நடைபெற்றது.
பின்னர் வண்ண மலர் களால் சுவாமிக்கு அலங்காரம் செய்து தீபாரா தனை நடைபெற்றது. சிறப்பு அலங் காரத்தில் முருகப் பெருமான் பக்தர்களுக்கு காட்சியளி தார்.

3 விசேஷங்கள் ஒரே நாளில் வந்ததால் காலை முதல் இரவு வரை ஆயிரக் கணக்கான பக்தர்கள்  கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர். பொது மக்கள் வசதிக்காக கோவில் மலை அடிவாரத்திலிருந்து மலை மீதுள்ள முருகன் கோவிலுக்கு அதிகாலை முதல் இரவு வரை பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டது. 

கூட்டம் அதிகமாக இருந்ததால் பொதுமக்கள் கோவிலில் நீண்ட வரி சையில் காத்திருந்து  தரிசனம் செய்தனர்.

இதே போல் கொடு முடி மகுடேசுவரர் வீர நாராயணப் பெருமாள் கோவிலில் உள்ள முருகப் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம், அர்ச்சனை, திருவீதி உலா நிகழ்ச்சி நடை பெற்றது. 
கொரோனா தடை காரண மாக கடந்த 2 ஆண்டு களுக்கு பிறகு கோவிலில் முதன் முறையாக நேற்று சுவாமி திருவீதி உலா நிகழ்ச்சி நடை பெற்றது.

இதேபோல் கிளாம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பழனிக் கவுண்டன் பாளை யத்தில் பழனிக்குமார சுவாமி கோவிலில் செவ்வாய்க் கிழமை, வளர்பிறை சஷ்டி திதி, கிருத்திகை நட்சத்திரம் அனைத்தும் ஒன்றாக வந்ததால் மலைமீது உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜை, அபிசேகம் நடைபெற்றது. 
அதனை தொடர்ந்து சிறப்பு அலங்காரம் செய் யப்பட்டு இரவு மகா தீபாராதனை காட்டப் பட்டது. பின்னர் அனை வருக்கும் பிரசாதம் வழங்கப் பட்டது.இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு முருகனை வழிபட்டனர்.

Similar News