உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

2 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது

Published On 2022-03-09 15:03 IST   |   Update On 2022-03-09 15:03:00 IST
பெருந்துறையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
ஈரோடு:

பெருந்துறையில் 2 வீடுகளின் பூட்டை உடைத்து திருடிய வாலிபர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.

பெருந்துறை வண்ணம்பாறையை சேர்ந்தவர் பரமசிவன். இவரது வீட்டில் கடந்த ஜனவரி மாதம் 13-ந் தேதி மர்மநபர் ஒருவர் வீட்டின் பூட்டை உடைத்து 7 பவுன் நகையை திருடி சென்றார்.

 இதேபோல் பெருந்துறை வெற்றி விநாயக நகரில் வேலுச்சாமி என்பவர் வீட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 20-ந் தேதி பூட்டை உடைத்து 2 பவுன் நகையை மர்மநபர் திருடி சென்றார். 

இதுகுறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து மர்மநபரை தேடி வந்தனர்.

 இந்நிலையில் வீடு புகுந்து திருடிய வழக்கில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த தனசேகரன் (29) என்பவரை போலீசார்  கைது செய்து நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.

 மேலும் தனசேகரனிடம் இருந்து 9 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  

Similar News