உள்ளூர் செய்திகள்
FILE PHOTO

கோவில் உண்டியலை உடைத்து கொள்ளை

Published On 2022-03-09 13:53 IST   |   Update On 2022-03-09 13:53:00 IST
கோவில் உண்டியல் கொள்ளை சம்பவத்தில் போலீசார் விசாரணை
அரியலூர்:

அரியலூர் அருகே கோயில் உண்டியலை உடைத்து அதில் இருந்த காணிக்கை பொருள்களை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல் துறையினர் தேடி வருகின்றனர்.

அரியலூர் மாவட்டம் கடுகூர் அருகேயுள்ள பூமுடையான்பட்டி கிராமத்தில் பெரியநாயகி மற்றும் சந்தனத்தாய் அம்மன் கோயில் உள்ளது.

இந்நிலையில், இன்று காலை அப்பகுதி பொதுமக்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்தபோது, கோயிலின் கதவு மற்றும் உள்ளே இருந்த உண்டியல் ஆகியவை உடைக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

உண்டியலில் ரூ.5 ஆயிரம் காணிக்கைகள் இருந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இது குறித்து தகவலறிந்து வந்த கயார்லாபாத் காவல் துறையினர், ஆய்வு செய்து, வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

Similar News