உள்ளூர் செய்திகள்
.

மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது

Published On 2022-03-09 13:47 IST   |   Update On 2022-03-09 13:47:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்ட்டார்.
சூளகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, பெரிய குத்திபாலா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனிரத்தினம்மா (30). கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. 

இதில் கிருஷ்ணன் தனது மனைவி முனிரத்தினம்மாவின் விரல்களை கத்தியால் குத்தி காயப்படுத்தினார். அது குறித்து முனிரத்தினம்மா கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News