உள்ளூர் செய்திகள்
மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் குடும்ப தகராறில் மனைவியை கத்தியால் குத்திய கணவர் கைது செய்யப்ட்டார்.
சூளகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி, பெரிய குத்திபாலா பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 37). கூலித்தொழிலாளி. இவரது மனைவி முனிரத்தினம்மா (30). கணவன் - மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதில் கிருஷ்ணன் தனது மனைவி முனிரத்தினம்மாவின் விரல்களை கத்தியால் குத்தி காயப்படுத்தினார். அது குறித்து முனிரத்தினம்மா கொடுத்த புகாரின் பேரில் சூளகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.