உள்ளூர் செய்திகள்
.

பெண் மாயம்

Published On 2022-03-09 13:41 IST   |   Update On 2022-03-09 13:41:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தாய் வீட்டிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற பெண் மாயமானார்.
மத்தூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூரை அடுத்துள்ள பூந்தமல்லி பகுதியை சேர்ந்தவர் ராமராஜன். இவரது மனைவி ஐஸ்வரியா. இவர்களக்கு 2 குழந்தைகள் உள்ளன.

இந்தநிலையில் ஐஸ்வரியா திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அடுத்துள்ள நாகாம்பட்டியில் உள்ள தனது தாய் வீட்டிற்கு செல்வதாக கூறி சென்றார். பின்னர் வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அவரை உறவினர் வீடு உள்பட பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. 

இது குறித்து மத்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான பெண்ணை தேடி வருகின்றனர்.

Similar News