உள்ளூர் செய்திகள்
திருட்டு சம்பவம் நடைபெற்ற விஸ்வநாதசுவாமி-விசாலாட்சி அம்மன் கோவிலை படத்தில் காணலாம்.

கோவிலுக்குள் புகுந்து அம்மன் தாலி திருட்டு

Published On 2022-03-08 15:40 IST   |   Update On 2022-03-08 15:40:00 IST
அருப்புக்கோட்டை அருகே கோவிலுக்குள் புகுந்து அம்மன் தாலியை திருடியர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
பாலையம்பட்டி


விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியில் விஸ்வநாதசுவாமி, விசாலாட்சி அம்மன் கோவில் உள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். 

கோவில் அர்ச்சகர் பாலமுருகன் நேற்று வழக்கமான பூஜைகளை நடத்தினார். பின்னர் இரவில் அவர் கோவில் கதவை அடைத்துவிட்டு சென்றுவிட்டார்.  இன்று காலை பாலமுருகன் பூஜைகள் செய்வதற்காக கோவிலுக்கு வந்தார். அப்போது காம்பவுண்டு கேட் திறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். கோவிலுக்குள் சென்று பார்த்தபோது பொருட்கள் சிதறிக்கிடந்தன. பீரோவும் திறந்து கிடந்தது.  எனவே யாரோ மர்ம மனிதர்கள் கோவிலுக்குள் புகுந்து திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருப்பது உறுதியானது. 

இதுகுறித்து அர்ச்சகர் பாலமுருகன் கோவில் நிர்வாகிகளுக்கு தகவல் கொடுத்தார். அவர்கள் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர். அதன்பிறகு கோவில் நிர்வாகி முத்துக்கனி சம்பவம் குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசில் புகார் செய்தார். கோவிலின் பீரோவில் இருந்த 1Ñ கிராம் தங்கத்தாலி, வெள்ளி கண்மலர் உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருப்பதாக அவர் புகாரில் தெரிவித்துள்ளார். 

அதன் பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  இந்த கோவிலில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பும் கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Similar News