உள்ளூர் செய்திகள்
சஸ்பெண்டு

சார்பதிவாளர் சஸ்பெண்டு

Published On 2022-03-08 15:36 IST   |   Update On 2022-03-08 15:36:00 IST
பதிவுத்துறை தலைவர் உத்தரவுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்ததாக சார்பதிவாளர் சஸ்பெண்டு செய்யப்பட்டார்.
விருதுநகர்

தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட தனியார் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தவர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யவில்லை என்று புகார் எழுந்தது. 

இதையடுத்து அந்த நிறுவனத்துக்கு சொந்தமான நிலங்களை பத்திரப்பதிவு செய்யக்கூடாது என்று பத்திர பதிவுத்துறை தலைவர் உத்தரவிட்டார்.

ஆனால் அந்த நிறுவனத்துக்கு சொந்தமான நிலத்தை கடந்த 2019ம் ஆண்டு விருதுநகர் மாவட்டம் திருச்சுழி சார்பதிவாளர் சரோஜா கிரைய பத்திரம் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. 

இதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில் பத்திரப்பதிவு துறை தலைவரின் உத்தரவுக்கு முரணாக பத்திரப்பதிவு செய்ததாக சார்பதிவாளர் சரோஜாவை சஸ்பெண்டு செய்து மதுரை பத்திரப்பதிவு துறை துணைத்தலைவர் ஜெகதீசன் உத்தரவிட்டுள்ளார். 

பத்திரப்பதிவுகளை கண்காணிக்க தவறிய மாவட்ட பதிவாளர் மற்றும் கண்காணிப்பு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசு  உத்தரவிட்டுள்ளது.

Similar News