உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

ஈரோட்டில் 26.75 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை

Published On 2022-03-08 15:28 IST   |   Update On 2022-03-08 15:28:00 IST
ஈரோட்டில் 26.75 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
ஈரோடு:

ஈரோட்டில் 26.75 லட்சம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

ஈரோடு மாவட்டத்தில் கொரோனா முதல் அலையை விட 2-ம் அலை பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. 2-ம் அலை உச்சத்தின் போது தினசரி பாதிப்பு அதிகபட்சமாக 1700 வரை பதிவானது. முன் களப்பணியாளர்கள், குழந்தைகள், இளைஞர்கள், முதியவர்கள் என அனைவரையும் வயது பேதமின்றி தாக்கியது.

இதையடுத்து பரவலை கட்டுப்படுத்தும் வகையில் மாவட்ட நிர்வாகம், சுகாதாரத்துறையினர், மாநகராட்சி ஆகியவை ஒன்றிணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொண்டனர். 
இதன்படி கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனுக்குடன் கண்டறியும் வகையில் கொரோனா பரிசோதனை அரசு ஆஸ்பத்திரி, தனியார் ஆஸ்பத்திரியில் மேற்கொள்ளப்பட்டது. 2-ம் அலையின் போது பாதிப்பு அதிகரித்து வந்ததால் பரிசோதனை எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டது.

தினசரி பரிசோதனை 10 ஆயிரமாக அதிகரிக் கப்பட்டு பரிசோதனை மேற் கொள்ளப்பட்டு வந்தது. இதன் மூலம் கொரோனா பாதிப்பு ஏற்பட்டவர்கள் உடனு க்குடன் கண்டறியப்பட்டு அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்ப வீட்டு தனிமையிலேயோ, ஆஸ் பத்திரியில் சிகிச்சை பெறும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதன் காரணமாக கொரோனா பாதிப்பு ஏற்பட் டவர்கள் விரைவாக குணம் அடைந்தார். இந்நிலையில் மாவட்டத்தில் உருமாற்றம் அடைந்த ஒமைக்ரான் தொற்று மூலம் மூன்றாம் அலையாக உருவாகி மீண்டும் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரிக்க தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்டு வந்தது. இதைத் தொடர்ந்து முதலில் 2 ஆயிரம் பரிசோதனை மேற்கொண்டு வந்த நிலையில் பின்னர் அது படிப்படியாக 4 ஆயிரமாக உயர்ந்தது. அதன் பின்னர் 6 ஆயிரமாக அதிகரித்தது. 
இதன் பயனாக தற்போது மாவட்டத்தில் கொரோனா தாக்கம் குறைந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் இதுவரை 26 லட்சத்து 75 ஆயிரத்து 173 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது தினமும் ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

Similar News