உள்ளூர் செய்திகள்
கிணற்றில் பிணமாக மிதந்த மூதாட்டி
ராஜபாளையத்தில் கிணற்றில் மூதாட்டி பிணமாக மிதந்தார்.
ராஜபாளையம்
ராஜபாளையம் சிங்கராஜாகோட்டை பெரியதெருவை சேர்ந்தவர் நாராயணராஜா. இவரது மனைவி ராமம்மாள்(வயது 82). இவர்களுக்கு ஒரு மகனும், 2 மகள்களும் உள்ளனர். ராமம்மாள் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்தார்.
நேற்று மதியஉணவு சாப்பிட்டபிறகு வீட்டில் இருந்து வெளியேசென்ற மூதாட்டி நீண்டநேரமாகியும் வீடுதிரும்பவில்லை. உறவினர்கள் பலஇடங்களில் தேடிப்பார்த்தும் அவரைப்பற்றி தகவல் கிடைக்கவில்லை.
இந்தநிலையில் வீட்டின் அருகே உள்ள கிணற்றில் ராமம்மாள் பிணமாக மிதப்பதை பேரன் பார்த்துள்ளார். இதுகுறித்து ராஜபாளையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது.
நிலைய அலுவலர் ஜெயராமன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து மூதாட்டியின் உடலை மீட்டனர். அவர் கிணற்றில் தவறிவிழுந்து இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என்பது தெரியவில்லை.
இது குறித்து ராஜபாளையம் தெற்கு காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.