உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

பவானிசாகர் அணை நீர்மட்டம் 91.91 அடியாக குறைந்தது

Published On 2022-03-07 15:20 IST   |   Update On 2022-03-07 15:20:00 IST
பவானிசாகர் அணையில் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும் குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது
ஈரோடு:

 பவானிசாகர் அணையில் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும் குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது.

ஈரோடு மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர்பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.

பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, கரூர், திருப்பூர் மாவட்டத்தில் 2 லட்சத்து 47 ஆயிரம் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன. 

கடந்த சில நாட்களாகவே நீர்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு இல்லாததால் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது.

மேலும் நீர்வரத்தை காட்டிலும் அணையில் இருந்து பாசனத்துக்காகவும் குடிநீருக்காகவும் அதிக அளவில் தண்ணீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருவதால் அணையின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. 

இன்று காலை நிலவரப்படி பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 91.91 அடியாக இருந்தது. 

அணைக்கு விநாடிக்கு 1055 கனஅடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து காலிங்கராயன் பாசனத்திற்கு  500 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப் பட்டு வருகிறது. 

இதேபோல் குடிநீருக்காக பவானி ஆற்றுக்கு 200 கனஅடியும், கீழ்பவானி வாய்க்கால் பாசனத்திற்கு 2300 கன அடி வீதம் என மொத்தம் 3000 கன அடி நீர் வெளி யேற்றப்பட்டு வருகிறது. 

Similar News