உள்ளூர் செய்திகள்
அரியலூர் மாவட்டம், ஈச்சங்காடு ரெயில் நிலையம் அருகே தண்டவாளத்தின் ஓரத்தில் வாலிபர் உடல் மீட்கப்பட்டது.
அரியலூர்:
அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு ரெயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தின் ஓரத்தில் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக விருத்தாசலம் ரெயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அதிகாலை சென்ற ரெயிலிலிருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்திருக்கலாமா? அல்லது தற்கொலை செய்திருப்பாரா? அல்லது யாரேனும் ஒடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டிருப்பார்களா என்ற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இறந்த வாலிபர் ரோஸ் கலர் அரைக்கை சட்டை, நீல ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்."
அரியலூர் மாவட்டம் ஈச்சங்காடு ரெயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தின் ஓரத்தில் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக விருத்தாசலம் ரெயில்வே காவல் நிலையத்துக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர், உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
அதிகாலை சென்ற ரெயிலிலிருந்து தவறி விழுந்து வாலிபர் உயிரிழந்திருக்கலாமா? அல்லது தற்கொலை செய்திருப்பாரா? அல்லது யாரேனும் ஒடும் ரெயிலில் இருந்து தள்ளிவிட்டிருப்பார்களா என்ற கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இறந்த வாலிபர் ரோஸ் கலர் அரைக்கை சட்டை, நீல ஜீன்ஸ் பேண்ட் அணிந்திருந்திருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்."