உள்ளூர் செய்திகள்
மனைவி இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை
விருதுநகர் மாவட்டத்தில் மனைவி இறந்த சோகத்தில் வாலிபர் தற்கொலை. செய்து கொண்டார். மேலும் 2 பேரும் சாவு.
விருதுநகர்
வெம்பக்கோட்டை அருகே உள்ள புலிப்பாறைபட்டியை சேர்ந்தவர் சங்கர் (வயது37). இவரது முதல் மனைவி பிரிந்துவிட்ட நிலையில் 2வதாக வைரம் என்பவரை திருமணம் செய்தார். அவர் திடீரென உடல்நலக்குறைவு காரணமாக இறந்துவிட்டார். இதனால் மனவேதனை அடைந்த சங்கர் விஷம் குடித்து மயங்கினார். சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுரைக்காய்பட்டியை சேர்ந்தவர் ராமர் (44). கிட்னி அறுவை சிகிச்சை செய்த இவர் வாழ்க்கையில் வெறுப்படைந்து விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை உறவினர்கள் காப்பாற்றிய நிலையில் 3 மாதத்துக்கு முன்பு மீண்டும் விஷம் குடித்தார். மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு மனைவி கோமதியுடன் தனது சகோதரி வீட்டில் ராமர் தங்கினார். இரவில் திடீரென அவரை காணாததால் கோமதி வெளியே வந்து பார்த்தபோது ராமர் வாயில் நுரைதள்ளியபடி இறந்து கிடந்தார். அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து இருக்கலாம் என கூறப்படுகிறது. கோமதி கொடுத்த புகாரின்பேரில் நத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருத்தங்கல்லை சேர்ந்த சரவணக்குமார் அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டார். இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்தார். திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.