உள்ளூர் செய்திகள்
கல்லூரி மாணவி, பிளஸ்-1 மாணவி கடத்தல்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவி, பிளஸ்-1 மாணவி கடத்தப்பட்டதாக போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டையில் உள்ள அரசு கலைக்கல்லூரியில் மாணவி 2ம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் மாணவியை கடந்த 3-ந்தேதி முதல் காணவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தினர் மாணவியை பல இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் கிடைக்கவில்லை.
இதையடுத்து மாணவியின் தாய் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதில் தனது மகளை, கிருஷ்ணகிரி கட்டிகானப்பள்ளியை சேர்ந்த மேஸ்திரி கோவிந்தராஜ் (வயது 22) என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மகளிர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நாகமணி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கல்லாவி பகுதியை சேர்ந்த பிளஸ்- 1 மாணவி, கடந்த 4-ந் தேதி முதல் மாயமானார். இதுகுறித்து மாணவியின் பெற்றோர், கல்லாவி போலீசில் புகார் செய்தனர்.
அதில் மாணவியை, ஊத்தங்கரையை சேர்ந்த விக்னேஷ் (19) என்ற வாலிபர் கடத்தி சென்று விட்டதாக தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.