உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்.

மீன்-இறைச்சி கடைகளில் அலை மோதிய கூட்டம்

Published On 2022-03-06 15:06 IST   |   Update On 2022-03-06 15:06:00 IST
ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் அதிகாலையில் இருந்தே இந்த மீன் மார்க்கெட்டில் மக்கள் குவிய தொடங்குவார்கள்.
ஈரோடு:

ஈரோடு ஸ்டோனி பிரிட்ஜ் அருகே மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் மீன்கள் அதிக அளவில் கிடைப்பதால் அதிகாலையில் இருந்தே இந்த மீன் மார்க்கெட்டில் மக்கள் குவிய தொடங்குவார்கள். 

சாதாரண நாட்களை விட வார இறுதி நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். இன்று ஞாயிற்றுக் கிழமை என்பதால் அதிகாலை முதலே மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. மக்கள் கடல் மீன்களை அதிக அளவில் வாங்கி சென்றனர்.

இதுபோல் கருங்கல் பாளையம் காவிரி ரோட்டில் உள்ள மீன் மார்க் கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. நெத்திலி மீன் வகைகள் அதிக அளவில் விற்பனை ஆனதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

இதைப்போல் இறைச்சி கடைகளிலும் இன்று கூட்டம் அதிகமாகவே இருந்தது. கோழி,ஆட்டு இறைச்சியை மக்கள் போட்டி போட்டு வாங்கி சென்றனர். இதே போல் ஈரோடு வ.உ.சி. பூங்கா பகுதியில் உள்ள நேதாஜி பெரிய மார்க் கெட்டில் அதிகாலை மக்கள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது.

பெண்கள் அதிக அளவில் வந்து ஒரு வாரத்திற்குத் தேவையான காய்கறிகளை வாங்கிச் சென்றனர். இதே போல் சம்பத் நகரில் உள்ள உழவர் சந்தை, பெரியார் நகரில் உள்ள உழவர் சந்தையிலும் மக்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

Similar News