உள்ளூர் செய்திகள்
ஒரே நாளில் 14,487 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 433 மையங்களில் தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
ஈரோடு:
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்றினை தடுக்க அரசு உத்தரவின் பேரில் தடுப்பூசி போடும் பணி முடுக்கி விடப் பட்டுள்ளது.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு அதன் மூலம் லட்சக்கணக்கில் மக்கள் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் காரணமாக தடுப்பூசி முகாம் நடத்த ப்படாமல் இருந்தது. தற்போது தேர்தல் அனைத்தும் முடிக்கப்பட்டு உள்ளதால் நேற்று தமிழகம் முழுவதும் மாபெரும் தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் முழுவதும் நேற்று 433 மையங்களில் தடுப்பூசி முகாம் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெற்றது. மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
இந்த முகாமில் முதல் தவணை தடுப்பூசி 1,046 பேரும், 2&ம் தவணை தடுப்பூசி 13,132 பேரும், பூஸ்டர் தடுப்பூசி 309 பேர் என மொத்தம் நேற்று ஒரே நாளில் 14,487 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதாரப்பணிகள் இணை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்துள்ளார்.