உள்ளூர் செய்திகள்
பள்ளி தலைமை ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் பள்ளி தலைமை ஆசிரியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த பாரதி நகரை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 54). இவர் ஒப்பதவாடி அருகே உள்ள பொன்னத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வந்தார்.
இவர் உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் இரவு வீட்டின் பின்புறம் உள்ள பாழடைந்த கட்டிடத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவல் அறிந்ததும் பர்கூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காககிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.