உள்ளூர் செய்திகள்
கோப்புபடம்.

பசுமாடு மர்ம சாவு - போலீசார் விசாரணை

Published On 2022-03-06 10:20 IST   |   Update On 2022-03-06 10:20:00 IST
வேதாரண்யத்தில் பசுமாடு திடீரென இறந்ததால் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சி, சன்னதி தெருவைச் சேர்ந்தவர் குமார் (51). இவர் கடற்கரையில் சாலையில் உள்ள தனது கொட்டகையில் ஆடு, மாடுகளை கட்டி வைப்பது வழக்கம். கடந்த 4ம் தேதி இரவு அங்கு பசுமாட்டை கட்டிவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். 

நேற்று அதிகாலை மாட்டுக் கொட்டகைக்கு சென்று பார்த்த போது மாடு இறந்து கிடந்தது தெரியவந்தது.
இது குறித்து குமார் வேதாரண்யம் போலீசில் புகா£¢ செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் தேவபாலன் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். 

இறந்த மாட்டின் விலை ரூ.40 ஆயிரம் எனக் கூறப்படுகிறது.

Similar News