உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் போக்சோவில் கைது

Published On 2022-03-06 10:12 IST   |   Update On 2022-03-06 10:12:00 IST
வேதாரண்யத்தில் சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட முதியவர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
வேதாரண்யம்:

வேதாரண்யம் நகராட்சிக்குட்ட முதலியார்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. இவரது மனைவி செல்வராணி (38). இவர்களுக்கு 10 வயதில் ஒரு மகள் உள்ளார்.

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த அசோகன் (53) என்பவர் இந்த சிறுமியின் வீட்டில் யாரும் இல்லாத போது குடிக்க தண்ணீர் கேட்பது போல் நடித்து வீட்டிற்குள் சென்று சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். 

இது குறித்து வெளியே சொன்னால் கொன்று விடுவேன் என்று மிரட்டினாராம். இது பற்றி சிறுமி தனது தாயாரிடம் கூறி அழுதுள்ளார். இதையடுத்து சிறுமியின் தாயார் செல்வராணி கொடுத்த புகாரின் போல் வேதாரண்யம் மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் மலர்க்கொடி வழக்கு பதிவு செய்து அசோகனை போக்சோ சட்டத்தில் கைது செய்துள்ளார்.

Similar News