உள்ளூர் செய்திகள்
வேதாரண்யம் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
வேதாரண்யம் அடுத்த வேட்டைக்காரனிருப்பு காவல் சரகம், வானவன்மகாதேவி கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ்கண்ணன். இவரது மனைவி பிரியா (26). இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்து ஒரு ஆண் குழந்தை உள்ளது.
பிரியா உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு மருந்து மாத்திரைகள் சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் மனமுடைந்த பிரியா வீட்டிலிருந்த மண்ணெண்ணையை தனது உடலில் ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
இதில் பலத்த தீக்காயமடைந்தவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரியா இறந்தார். புகாரின் பேரில் தலைஞாயிறு இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார். திருமணம் ஆகி 4 ஆண்டுகளே ஆவதால் நாகை ஆர்.டி.ஓ தனி விசாரணை செய்து வருகிறார்.