உள்ளூர் செய்திகள்
வேதாரண்யேஸ்வரர்-ருத்ரா யாகம்

வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேகம்

Published On 2022-03-06 09:52 IST   |   Update On 2022-03-06 09:52:00 IST
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் ருத்ராபிஷேகம் நடந்தது.
வேதாரண்யம்:

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மிகவும் பழமை வாய்ந்த பாடல் பெற்ற தலம். இங்கு அகத்திய மாமுனிவருக்கு திருமண கோலத்தில் சிவபெருமான் காட்சி கொடுத்த தலம். இங்கு வேதங்கள் பூஜித்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்மந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.

இங்கு ருத்ரா அபிஷேகத்தை யொட்டி சிறப்பு யாகங்கள் நடைபெற்றது. இதில் பல்வேறு திரவியங்கள், பழவகைகள் வைத்தும், குடங்கள் வைத்தும் வேதமந்திரங்கள் ஓதப்பட்டது. 

பின்பு குடங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சிவலிங்கத்திற்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்தனர்.

Similar News