உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கேபிள் வயர் திருட்டில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
விருதுநகர்
சிவகாசி அருகே உள்ள செவலூர் பகுதியில் 750 அடி கேபிள் வயர் திருடுபோனது.
இதுகுறித்து ராஜ்குமார் என்பவர் கொடுத்த புகாரின்பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கேபிள் வயரை திருடிய மத்தியசேணையை சேர்ந்த ஜெயசூர்யா (25), வெள்ளைச்சாமி(22), பெருமாள்(30) ஆகிய 3 பேரை கைது செய்தனர்.