உள்ளூர் செய்திகள்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இளம்பெண் தற்கொலை செய்துகொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள புதுசென்னல்குளத்தை சேர்ந்தவர் முத்துக்குமார். இவரது மனைவி சித்ரா (வயது 32). பண பிரச்சினை காரணமாக விரக்தியில் இருந்த சித்ரா சம்பவத்தன்று வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு விசாரித்து வருகின்றனர்.