உள்ளூர் செய்திகள்
.

சரக்கு ஆட்டோ மோதி தொழிலாளி பலி

Published On 2022-03-05 16:09 IST   |   Update On 2022-03-05 16:09:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே சரக்கு ஆட்டோ மோதி வாலிபர் பலியானார்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா முக்கரம்பள்ளியை சேர்ந்தவர் ராமன் (வயது 58). கூலித் தொழிலாளி. 

இவர் மோட்டார் சைக்கிளில் குன்னத்தூர் - ரெயில் நிலைய சாலையில் மூலக்கடை பக்கமாக சென்று கொண் டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு ஆட்டோ அவர் சென்ற மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ராமன் சம்பவ இடத்திலேயே பலியானார். 

இது குறித்து சாமல்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News