உள்ளூர் செய்திகள்
கும்பாபிஷேகத்தையொட்டி சுவாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலிப்பதை படத்தில் காணலாம்.

தூருவாசமுனிவர் கோவில் கும்பாபிஷேகம்

Published On 2022-03-05 15:32 IST   |   Update On 2022-03-05 15:32:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சோம நாதேஸ்வரர் கோவில் வலாளகத்தில் ஏற்கனவே இருந்த ஸ்ரீ தூருவாச முனிவர் கோயில் புதியதாக புனர் அமைக்கப்பட்டு கும்பாபேபிஷேகம் விழா நடந்தது .
ராயக்கோட்டை, மார்ச்.5& -

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை சோம நாதேஸ்வரர் கோவில் வலாளகத்தில் ஏற்கனவே இருந்த ஸ்ரீ தூருவாச முனிவர் கோயில் புதியதாக புனர் அமைக்கப்பட்டு கும்பாபேபிஷேகம் விழா  நடந்தது .

காலை கணபதி பூஜை, கங்கா பூஜை, புண்ணி யாதானம் காப்புகட்டுதல், பிராணபிஸ்த, மகாபூர்ணாகுதி நடைபெற்றது. அதை தொடர்ந்து நேற்று பிரம்மா முகூர்த்தத்தில் விமான கோபுர கும்ப கலச அபிஷேகமும் தூருவாச முனிவருக்கு கலச அபிஷேகமும் சிறப்பு ஆராதனை, அலங்காரமும், சிறப்பு அர்ச் சனையும், சுவாமிக்கு கண் திறப்பும், கோமாதா பூஜை ஆராதனையும் அதை தொடர்ந்து மகாதீப ஆராதனையும் நடை பெற்றது. அதை தொடர்ந்து தீர்த்த பிரசா தமும் வழங்கப்பட்டது.

விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் செய் திருந் தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய் தனர் அனைவருக்கு அன்னதானம் வழங் கப்பட்டது.

Similar News