உள்ளூர் செய்திகள்
ஆப்பக்கூடல் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் ரத்து
ரத்து செய்யப்பட்ட ஆப்பக்கூடல் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் வேறு ஒரு நாளில் நடைபெறும் என அறிவிப்பு.
ஆப்பக்கூடல்:
ரத்து செய்யப்பட்ட ஆப்பக்கூடல் பேரூராட்சி துணைத்தலைவர் தேர்தல் வேறு ஒரு நாளில் நடைபெறும் என அறிவிப்பு.
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.
இதில் பேரூராட்சி தலைவர் தேர்தலில் அ.தி.மு.க.வை சேர்ந்த எஸ்.செல்வி 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். தி.மு.க. 7 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தது.
இதனை தொடர்ந்து துணைத்தலைவர் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் தி.மு.க. கவுன்சிலர்கள் துணைத் தலைவர் தேர்தலில் ஓட்டு போட வரவில்லை.
இதனால் துணைத் தலைவர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. துணைத்தலைவர் தேர்தல் வேறு ஒரு நாளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.