உள்ளூர் செய்திகள்
நாகை மாவட்டத்தில் அறுவடை செய்த நெல் தார்ப்பாய் மூலம் மூடப்பட்டுள்ளது.

நேரடி நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும்

Published On 2022-03-05 12:47 IST   |   Update On 2022-03-05 12:47:00 IST
நேரடி நிலையங்களில் தேங்கியுள்ள நெல் மூட்டைகளை உடனே கொள்முதல் செய்ய வேண்டும் என நாகை மாவட் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாகப்பட்டினம்:

காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப் பெற்றதன் காரணமாக, டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
 
அதன்படி நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட ஒரு சில பகுதிகளில் மட்டுமே விவசாயிகள் அவசரகதியில் அறுவடை பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மாவட்டத்திற்கு உட்பட்ட திருக்குவளை, சுந்தர பாண்டியம், வாழக்கரை, மீனம்ப நல்லூர், கீழ்வேளூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அறுவடை பணிகள் வெகுவாக முடங்கியுள்ளன.

வெளி மாவட்டங்களிலிருந்து வந்த அறுவடை எந்திரங்கள் சாலை ஓரமாக நிறுத்தப்பட்டிருக்கின்றன. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அரசு கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் கடந்த 2&ந் தேதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உட்பட 186 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணிகள் மேற்கொள்ளப் படாமல், நெல் மூட்டைகள் அனைத்தும் தார்பாய்கள் கொண்டு பாதுகாப்பாக மூடப்பட்டுள்ளன.

நாகை மாவட்டத்திற்கு உட்பட்ட பெரும்பாலான பகுதிகளில் இன்று காலை முதல் மந்தமான வானிலை நிலவி வருகிறது. 
கனமழை முன்னெச் சரிக்கை நடவடிக்கையாக இன்று 4&வது நாளாக கொள்முதல் பணிகள் அனைத்தும் முடங்கி உள்ளது. 

மழை பாதிப்பு கருத்திற் கொண்டு அரசு கொள்முதல் நிலையங்களில் பணியை தொடங்கும் பொழுது தற்காலிக அரசு நேரடி கொள்முதல் நிலையங்கள் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை முதலாவதாக கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் தங்களது கோரிக்கையை முன்வைத்துள்ளனர்.
 
மேலும் மார்ச் மாதத்தில் பருவம் தவறி பெய்யும் மழையால் தாளடி நெற்பயிர்கள் சாய தொடங்கி உள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Similar News