உள்ளூர் செய்திகள்
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே தொழிலாளி உள்பட 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
ராஜபாளையம்
ராஜபாளையம் அருகே உள்ள கொத்தங்குளம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் மகேந்திரகுமார்(25), மில் தொழிலாளி. மது பழக்கத்துக்கு அடிமையான இவர் சம்பவத்தன்று மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அம்மாபட்டியை சேர்ந்தவர் கருப்பசாமி (29). 5 வருடங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி இவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் விரக்தி அடைந்த கருப்பசாமி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்
மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.