உள்ளூர் செய்திகள்
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேன்கனிக்கோட்டை:
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை போலீசார் பேட்டராய சாமி கோவில் அருகில் ரோந்து சென்றனர்.
அங்கு பணம் வைத்து சூதாடிய மாரசந்திரம் ரமேஷ் (42), பி.ஜி.தொட்டி முத்து (22), கோட்டைவாசல் பாக்யராஜ் (38), சந்தைமேடு தெரு விஜய் (38), அண்ணாநகர் மாதேஷ் (37), மேல்கொட்டாய் சாகுல் (28) ஆகிய 6 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.4,500 பறிமுதல் செய்யப்பட்டது.