உள்ளூர் செய்திகள்
.

மோட்டார் சைக்கிள்கள் மோதல் தொழிலாளி பலி

Published On 2022-03-04 16:07 IST   |   Update On 2022-03-04 16:07:00 IST
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் தொழிலாளி பலியானார்.
ஊத்தங்கரை:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை தாலுகா ஆனந்தூர் அருகே உள்ள கொல்லப்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 35).தொழிலாளி. 

இவர் மோட்டார் சைக்கிளில் ஓலைப்பட்டி அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மற்றொரு மோட்டார்சைக்கிளில் வந்த நபர் கோவிந்தராஜ் மீது மோதினார்.

இந்த விபத்தில் கோவிந்தராஜ் பலத்த காயம் அடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் கோவிந்தராஜ் இறந்தார். இது குறித்து கல்லாவி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Similar News